சமூக வலதளங்களில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் வலை தளம் இந்த டிவிட்டர். ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களுடன் வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் இந்த வலைதளத்தினை உபயோகிப்பவர்களின் என்னிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டு வருகிறது. எதற்காகத் தான் இந்த டிவிட்டர் என்று சிந்தித்துப் பார்த்தேன். இது நம் அன்றாட இணைய வாழ்விற்கு அவசியமான ஒன்று தானா? யார் இந்த 'பின்பற்றுவோர்கள்'? அவர்களுக்கு நம் கருத்து எந்த வகையில் உதவும் என்று சிந்தித்தேன். டிவிட்டரால் யார் சாதித்தது என்ன? மிஞ்சிப் போனால் எனக்கு இந்த பதிவு போட காரணமாக இருக்கிறது டிவிட்டர். சிந்தித்ததன் விளைவாக தோன்றிய கருத்துக்களை இங்கே பதிவுலகில் பகிர்ந்துக் கொள்கிறேன்.