Thursday, July 08, 2010

பட்ஜட் மொபைல் வாங்க குறிப்புகள்

இப்போதெல்லாம் அலைபேசி இல்லை என்று சொல்வது எல்லாம் ஆச்சரியப்படும் விஷயமாகிவிட்டது. வசதிற்கேற்ப அவரவர் தனக்கென்று ஒரு அலைபேசியை வாங்கி கையில் வைத்துக் கொண்டு தான் தங்கள் தனிமையை போக்கிக்கொள்கின்றனர். இன்னும் சிலர், அலைபேசிக்காகவே தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர் என்பது வேதனையான விசயம். அறிவியல் கண்டுபிடிப்புகளை சரியாக உபயோக்கிக்காமல் தவறான-முறையில்/தவறாக உபயோகிப்பது அறிவீனமான செயல் என்றுக் கருதுகிறேன். இந்த தத்துவத்துடன் தலைப்புக்கு வருவோம்.

சிலர், தான் மொபைல் வாங்குவதாக முடிவுக் கட்டி விட்டு, பார்ப்பவர்களை எல்லாம் அறிவுரை கேட்பார்கள். போதாத குறைக்கு, அவரது மொபைலையும் வாங்கி நோண்டிப் பார்த்துக் கொண்டே, "என்ன விலை? சார்ஜ் எவ்வளவு நேரம் நிக்குது" என்றுக் கேட்பார்கள். என்னத்த நோண்டுகிறாரே என்று எட்டிப் பார்த்துக் கொண்டே அரை கவனத்துடன் பதில் அவரும் பதில் சொல்வார். இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், மொபைல் வாங்குவோருக்கு, தனக்கு மொபைலில் என்ன அம்சமெல்லாம் இருக்க வேண்டும் என்றுக் கூட யோசித்து இருக்க மாட்டார். முதலில் நமக்கு எந்த மாதிரியான மொபைல் 'தேவை' என்பதை ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைமுறை வேறுபடும். அதனால், மற்றவரைப் பார்த்து அதே வகை மொபைல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கைவிட வேண்டும். மொபைலின் ஒவ்வொறு அம்சமும் நமக்கு எந்தெந்த வகையில் பயன்படும் என்று ஆராய வேண்டும். விரிவாகப் பார்ப்போம்.

திரை:

திரை என்பது ஒரு அலைபேசியில் இருந்தே ஆக வேண்டிய அடிப்படை அம்சம். திரையின் நீளம் அகலம் எல்லாம் அதிகமாக இருக்கும் போது, பயன்பாடு எளிதாக இருக்கும். அதிகமாக குறுன்செய்தி அனுப்புபர்கள் பெரிய திரையினை நாடலாம். புகைப்படங்கள் பார்க்க, பெரிதான அளவிலான திரை தேவையே இல்லை. காரணம், திரையின் அளவு வேறு, திரையின் துல்லியம் என்பது வேறு. உதாரணத்திற்கு, சில வகை மொபைல்களில் 2" திரையில், 240x320 துல்லியம் இருக்கிறது. சில வகைகளில் 2"2' அளவில் திரை இருந்தாலும், அதன் துல்லியம் வெறும் 176x144 அளவிற்குத் தான் இருக்கும். இதில், துல்லியம் என்பது ஓரளவு இருந்தாலே போதும், காட்சிகள் பெரிதாகத் தோன்றி பயன்படுத்த எளிதாக இருக்கும் காரணத்தினால் இரண்டாவதாக சொன்ன வகையே சிறந்ததாக பரிந்துரைக்கிறேன்.

கேமரா:

பெரும்பாலான மொபைல்களில், டிஜிட்டல் கேமராவின் அம்சங்கள் இல்லாததால், ஓரளவு துல்லியம் இருந்தாலே போதும். அலைபேசிகளில் இருக்கும் கேமராவைப் பொறுத்த வரை, 2 MP கேமரா போதுமானது. மெகா பிக்ஸல் அதிகமாகும் போது துல்லியமாக இருக்கும் என்பது தவறானக் கருத்து.
புகைப்படத்தின் தெளிவு அதிகமாக இருக்குமே தவிற, இது வெறும் எண்கள் ரீதியில் தான். நிகழ்-நேரத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது.

பொழுதுப்போக்கு அம்சங்கள்:

இன்று பொழுதுப்போக்கு அமங்கள் கொண்ட அலைபேசிகள் எளிதான விலையில் கிடைப்பதால் அவ்வாறான வகை அலைபேசிகள் வாங்குவதே சிறந்தது. நாம் வெளியே செல்லும் போது நமது MPx பிளேயரைக் கொண்டு செல்ல முடியாது. அதனால் மொபைலிலேயே இந்த அம்சம் இருக்கும் போது, பல சமயம் மிகவும் உபயோகமாக இருக்கும்.

அதிகப்படியான வசதிகள்:

கண்டிப்பாக புளூடூத் தேவை. இது மிகவும் பயனளிக்கும். ஆனால், காப்புரிமை செய்யப்பட்ட கோப்புகளை பகிர்தலைத் தவிர்த்திடுங்கள். எல்லோருமே இதைத் தவிர்த்தால், எல்லோருமே ஒரிஜினல் கோப்புகளை வாங்கும் அளவிற்கு மலிவாக கிடைத்துவிடும்.

GPRS அல்லது 3G? என்ற கேள்வி பலருக்கு கேள்விக்குறியாகவே இருக்கும். வீட்டில் இனையம் இருந்தால், மொபைலில் GPRS மட்டுமே போதுமானது. ஆர்வமாக 3G அலைபேசிகள் வாங்குவிட்டு, முன்பக்க கேமராவினை சிகை அலங்காரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பலரைப் பார்த்திருக்கிறேன்.

talk-time மற்றும் StandBy time:

மொபைல் வாங்கும் போது மிக மிக மிக (எத்தனை 'மிக' வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்) முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம். மொபைல் கடைக்காரர் சொல்வதை எல்லாம் காதில் வாங்காதீர்கள். ஒரு மாடல் பிடித்திருந்தால் அதன் இணையதளத்தில் விபரத்தைப் பாருங்கள். திருப்திகரமான எண்களை நீங்கள் கண்டீர்கள் என்றால், மற்ற தளங்களில் அதன் பயனர் விமர்சனங்களைப் பாருங்கள். சிலருக்கு மாற்றுக் கருத்து என்பது எப்போதுமே இருக்கும். அதனால், பத்திற்கு 8 மதிப்பெண் இருந்தாலும்.

அழகு:

அழகாக மொபைல் வைத்திருப்பது தான் பெருமை என்ற எண்ணம் நிலவி வருகிறது. இதனால், ஸ்லிம் என்றும், சில்வர் ஃபினிஷ் என்றும் பல அலங்காரத்துடன் பல அலைபேசிகள் சந்தைக்கு வருகிறது. ஸ்லிம் அலைபேசிகள் பயன்படுத்தும் போது, பேட்டறி சீக்கரமாக விரையம் ஆக வாய்ப்புள்ளது. அதேப் போல, சில்வரால் ஆன பாகங்களினால் பயன்படுத்தும் போது எளிதாக சீக்கிரமாகவே சூடாகிவிடும். இதனால், அழகு என்பதைப் பார்க்காமல், விசைகள் எளிதாக உள்ளனவா, எத்தனை மேலதிக விசைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நினைவகம்:

சில மொபைல்களில் அடிப்படை நினைவகம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் நாம் அப்ளிகேஷன் மற்றும் விளையாட்டுகள் பயன்படுத்துமோ, பாதியிலேயே முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, அடிப்படை நினைவகம் குறைந்த பட்சம் 20 மெகா.பைட் இருத்தல் நலம். மற்றப்படி, நினைவகத் தகடுக் கூட அதிகப் பட்சம் 4 GB க்கு மேலே தேவையில்லை. அதற்கும் குறைவாக இருந்தால் தான் அலைபேசியும் தொய்வில்லாம இயங்கும்.

நிறுவனம் சார்ந்த பொருள் தான் வாங்க வேண்டுமா? என்றுப் பலர் யோசிக்கின்றனர். இது முழுக்க முழுக்க அவரவர் சொந்த முடிவுக்குட்பட்டது. புகழ்பெற்ற நிறுவனத்தின் அலைபேசிகளின் விலைகளைவிட, நிறுவனம் சாராத/நிறுவனமாகக் காட்டிக்கொள்ளும் அலைபேசிகளின் விலை குறைவாக உள்ளதால் பலர் குழப்பமடைகின்றனர். இதில் குழப்பமடைய எதுவுமே இல்லை. இப்போது வாங்கும் அலைபேசி நம்மிடம் எத்தனை நாளுக்கு வைத்திருப்போம் என்று சின்னதாக ஒரு யோசனை இருக்கும். பெரும்பாலானோர், தான் வாங்கும் அலைபேசிக்கு வாங்கும் போதே 2 ஆண்டு தான் ஆய்ள் என்று தீர்மானித்துவிடுகின்றனர். இது போன்றோர். ஒன்றரை வருடத்திலேயே அலைபேசியைக் கன்னாபின்னாவென பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு, பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் தேவை இல்லை. சிலர், கண்ணும் கருத்துமாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரபல நிறுவனம் சார்ந்த அலைபேசியை வாங்குவதால், இலவச சேவை மட்டுமல்லாமல், நீடித்து வரும் என்ற நம்பிக்கை வரும்!

சந்திப்போம்.
-வினோ

1 கருத்துரைகள்:

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -

Blog Archive